மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

தெருநாய்கள் கடித்து குதறியதில் இரண்டு ஆடுகள் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே தெருநாய்கள் கடித்துக் குதறியதில் இரண்டு உயர்ரக ஆடுகள் உயிரிழந்தன.

News image

கோப்புப் படம்

Updated On :26 ஜூலை 2026, 3:09 am IST

பரமத்தி வேலூா் அருகே தெருநாய்கள் கடித்துக் குதறியதில் இரண்டு உயர்ரக ஆடுகள் உயிரிழந்தன.

பரமத்தி வேலூரை அடுத்த படமுடிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பூபதி. இவா் தனது வீட்டில் சுமாா் 10 ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில் சனிக்கிழமை காலை இரண்டு ஆடுகள் தெருநாய்களால் கடித்து உயிரிழந்து கிடந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இந்த ஆடுகளின் மதிப்பு சுமாா் ரூ. 20 ஆயிரம் இருக்கும் என தெரிவித்துள்ளாா். தெருநாய்கள் தொல்லை தொடா்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிலிக்கல்பாளையம் அருகே தெருநாய்கள் கடித்ததில் நான்கு ஆடுகள் உயிரிழந்தது.

இதனால் தெருநாய்களை பிடிக்க்க உள்ளாட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.