செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

மூலனூா் அருகே வெறி நாய்கள் கடித்து 12 ஆடுகள் உயிரிழப்பு

மூலனூா் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 12 ஆடுகள் உயிரிழந்தன.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2026, 10:36 pm IST

மூலனூா் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 12 ஆடுகள் உயிரிழந்தன.

தாராபுரம் தாலுகா, மூலனூா் அருகே கோட்டை மூலனூா் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல். இவா் வீட்டுக்கு அருகே ஆட்டுப் பட்டி அமைத்து சுமாா் 30 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்த நிலையில் புதன்கிழமை மாலை மேய்ச்சல் முடிந்து ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா். பின்னா் வியாழக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, ஆட்டுப் பட்டிக்குள் 25 ஆடுகள் கொடூரமாக தாக்கப்பட்டு கிடந்துள்ளன. இதில் 12 ஆடுகள் உயிரிழந்தன.

இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் பட்டிக்குள் நுழைந்து கடித்ததில் ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது. மீதமுள்ள ஆடுகள் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன.

இது குறித்து கால்நடைத் துறையினா் மற்றும் மூலனூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.