அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

செந்தில் பாலாஜிக்கு 58-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வியாழக்கிழமை (செப்.5) வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
செந்தில் பாலாஜி(கோப்புப்படம்)
Updated On :3 செப்டம்பர் 2024, 8:15 pm

Din

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வியாழக்கிழமை (செப்.5) வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 58-ஆவது முறையாக அவரின் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14- ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாா். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றமும், சென்னை உயா்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன. தற்போது செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. இதனால், சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் செந்தில்பாலாஜி ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வியாழக்கிழமை வரை நீட்டித்து உத்தரவிட்டாா். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 58-ஆவது முறையாக நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

குறுக்கு விசாரணை: மேலும், சட்டவிரோத பண பரிமாற்றச் தடை சட்ட வழக்கில் சிட்டி யூனியன் வங்கியின் கரூா் கிளையின் தலைமை மேலாளராக பணியாற்றிய ஹரிஷ்குமாா் நீதிபதி அல்லி முன் ஆஜரானாா். அவரிடம் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்குரைஞா் கெளதமன் ஆஜராகி குறுக்கு விசாரணை செய்தாா். குறுக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை நிறைவடையாததால் வழக்கை வியாழக்கிழமைக்கு தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.