இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சேலம் பட்டாசு குடோனில் வெடி விபத்து: ஒருவர் பலி

சேலம் பட்டாசு குடோனில் வெடி விபத்தில் ஒருவர் பலியானார்.

News image
சேலம் பட்டாசு குடோனில் வெடி விபத்து
Updated On :4 செப்டம்பர் 2024, 6:38 am

DIN

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே பட்டாசு குடோனில் வெடிபொருள்களை இறக்கும்போது நேரிட்ட வெடி விபத்தில் சிக்கி ஜெயராமன் என்பவர் பலியானார்.

சிவகாசியைச் சேர்ந்த இவர் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அடுத்த பருத்திக்காடு கோமாளி வட்டம் பகுதியில் பட்டாசு குடோன் நடத்தி வந்தார்.

அனுமதி பெற்று நடத்தப்பட்டு வரும் இந்த பட்டாசு குடோனில் இன்று காலை நாட்டு வெடிகளை இறக்கி வைக்கும் பொழுது கைத்தவறி ஒரு முட்டை கீழே விழுந்து திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த ஜெயராமன் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

பட்டாசு குடோன் செயல்பட்ட பகுதி ஊருக்கு வெளியில் ஒதுக்குப்புறமாக இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.