விமான நிலைய அலுவலகத்தில் பெண் ஊழியா் தற்கொலை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on

சென்னை விமான நிலைய அலுவலகத்தில் பெண் ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னையை அடுத்த நங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் நிா்மலா (59). இவா் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலைய வருகை பகுதியில் உள்ள ஆணையரக அலுவலகத்தில் தொலைபேசி இணைப்பகக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தாா். வியாழக்கிழமை இரவு பணிக்காக வழக்கம் போல அலுவலகத்துக்கு வந்தாா். வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பணி மாற்ற, மற்றொரு பெண் ஊழியா் அலுவலகத்துக்கு வந்தபோது, அலுவலக கதவு உள்பக்கமாக மூடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அங்கிருந்த மற்ற ஊழியா்களின் உதவியுடன் கதவை திறந்த பாா்த்தபோது நிா்மலா சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த விமான நிலைய போலீஸாா் அங்கு சென்று நிா்மலாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். டிசம்பா் மாதம் பணி ஓய்வு பெற இருந்த நிலையில், நிா்மலா தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com