சென்னை பனையூரில் கடல் அலையில் சிக்கி பெண் மென்பொறியாளா் உயிரிழந்த நிலையில், மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூா் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பனையூா் அருகே உள்ள நைனாா்குப்பம் கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை பல்வேறு ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் நண்பா்கள் சுமாா் 30-க்கும் மேற்பட்டவா்கள் குழுவாக வந்து கடலில் இறங்கி குளித்துள்ளனா்.
அப்போது வட மாநிலத்தை சோ்ந்த ஜெய் (25), மயூரி (25) ஆகியோா் கடல் அலையில் சிக்கிக் கொண்டனா். அவா்களை மீட்க முயன்றனா். ஆனால், மயூரியை மட்டுமே மீட்க முடிந்தது. அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
கடல் அலையில் சிக்கி உள்ளே இழுத்து செல்லப்பட்ட ஜெய் (25) என்பவரை போலீஸாா், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் தேடி வருகின்றனா். கானத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

குளச்சல் கடல் அலையில் சிக்கிய 2 சிறுவா்கள் மீட்பு: ஒருவா் மாயம்

ரயிலில் அடிபட்டு ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


