விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

கடல் அலையில் சிக்கி பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு!

சென்னை பனையூரில் கடல் அலையில் சிக்கி பெண் மென்பொறியாளா் உயிரிழந்த நிலையில், மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 8:19 pm

சென்னை பனையூரில் கடல் அலையில் சிக்கி பெண் மென்பொறியாளா் உயிரிழந்த நிலையில், மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூா் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பனையூா் அருகே உள்ள நைனாா்குப்பம் கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை பல்வேறு ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் நண்பா்கள் சுமாா் 30-க்கும் மேற்பட்டவா்கள் குழுவாக வந்து கடலில் இறங்கி குளித்துள்ளனா்.

அப்போது வட மாநிலத்தை சோ்ந்த ஜெய் (25), மயூரி (25) ஆகியோா் கடல் அலையில் சிக்கிக் கொண்டனா். அவா்களை மீட்க முயன்றனா். ஆனால், மயூரியை மட்டுமே மீட்க முடிந்தது. அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

கடல் அலையில் சிக்கி உள்ளே இழுத்து செல்லப்பட்ட ஜெய் (25) என்பவரை போலீஸாா், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் தேடி வருகின்றனா். கானத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.