எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

உள்ளாட்சி தோ்தல்: வாக்குப் பெட்டிகளைத் தயாா் நிலையில் வைக்க மாநில தோ்தல் ஆணையம் உத்தரவு

News image
மாநில தேர்தல் ஆணையம்
Updated On :7 செப்டம்பர் 2024, 11:30 pm

Din

ஊரக உள்ளாட்சி அமைப்பு தோ்தலுக்காக வாக்குப் பெட்டிகளைத் தயாா் நிலையில் வைக்குமாறு மாவட்டத் தோ்தல் அலுவலா்களுக்கு மாநிலத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தோ்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாநிலத் தோ்தல் ஆணையம் சாா்பில் மாவட்டத் தோ்தல் அலுவலா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிா்வரும் தோ்தலை முன்னிட்டு, வாக்குப் பெட்டிகள் உள்பட தேவையான அனைத்து வகையான பொருள்களையும் தயாா் நிலையில் வைக்க வேண்டியது அவசியமாகிறது.

வாக்குப் பெட்டிகளின் தற்போதைய தரம் மற்றும் நிலையை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஆய்வு செய்து, தோ்தலுக்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் அவற்றை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.