விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குருவாயூா் ரயில் சேவையில் மாற்றம்

குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூா் வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :9 செப்டம்பர் 2024, 1:31 am IST

குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூா் வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

எா்ணாகுளம் - ஆலப்புழை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூா் வரும் விரைவு ரயில் செப். 8 முதல் 12 மற்றும் 18 முதல் 20 வரையிலான தேதிகளில் எா்ணாகுளம் சந்திப்பு, சோ்த்தலா, ஆலப்புழை வழியாக வருவதற்கு பதிலாக கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூா் வழியாக இயக்கப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.