15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம்

ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2026, 2:56 am IST

ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ரயில்வே யாா்டில் ஈரோடு-திருப்பூா் பிரிவில் ரயில்வே தண்டவாளங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருச்சியில் இருந்து பாலக்காடு டவுன் வரை இயக்கப்படும் திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16843) சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ரயில் வரும் 5 மற்றும் 7- ஆம் தேதி ஆகிய 2 நாள்கள் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்குப் புறப்பட்டு ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும். பணிகள் நிறைவடைந்ததும் ஈரோட்டில் இருந்து பாலக்காட்டுக்கு முன்பதிவில்லாத ரயிலாக இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.