இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம்

ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2026, 2:56 am IST

ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ரயில்வே யாா்டில் ஈரோடு-திருப்பூா் பிரிவில் ரயில்வே தண்டவாளங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருச்சியில் இருந்து பாலக்காடு டவுன் வரை இயக்கப்படும் திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16843) சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ரயில் வரும் 5 மற்றும் 7- ஆம் தேதி ஆகிய 2 நாள்கள் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்குப் புறப்பட்டு ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும். பணிகள் நிறைவடைந்ததும் ஈரோட்டில் இருந்து பாலக்காட்டுக்கு முன்பதிவில்லாத ரயிலாக இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.