
சென்னை: சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த. வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த. வெள்ளையன் (76). நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறாா். செப்.3-ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சாதாரண வாா்டில் அனுமதிக்கப்பட்ட அவா், செப்.5-ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா்.
இந்த நிலையில், தனியார் மருத்துவமனை சார்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், த. வெள்ளையன் ”நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளாா். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரை மருத்துவ நிபுணா்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனா். தற்போதைய நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது” என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.