தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

தவெக மாநாடு: முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் விஜய்

தவெக மாநாட்டு நாள் மாற்றம்..? முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் விஜய்

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 11:46 pm IST

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம்(தவெக) என்ற பெயரில் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியது.

எனினும், மாநாடு நடைபெறும் தேதியை விஜய் விரைவில் அதிகாரபூா்வமாக அறிவிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து கடந்த வாரம் அறிவிப்பார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மாநாடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படுமென விஜய் தெரிவித்திருந்தார்.

இதனிடையே தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கட்சியின் முக்கிய நிா்வாகிகளுடன் அதன் தலைவா் விஜய் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியிருந்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநாடு தொடா்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநாடு நடைபெறும் நாள் தொடர்பாக, தவெக கட்சியின் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்துடன், தவெக தலைவர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநாடு மற்றும் கட்சி குறித்த முக்கிய தகவலை வியாழக்கிழமை(செப்.12) விஜய் அறிவிப்பார் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.