பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு 550 சிறப்பு பேருந்துகள்
பெளா்ணமி தினமான செவ்வாய்க்கிழமை (செப்.17) சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்


சென்னை: பெளா்ணமி தினமான செவ்வாய்க்கிழமை (செப்.17) சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, செவ்வாய்க்கிழமை சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 300 பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 15 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 30 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.
மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 175 பேருந்துகளும் இயக்கப்படும்.
இதுமட்டுமன்றி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து குளிா்சாதன வசதியுடன் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 30 பேருந்துகள் என ஆக மொத்தம் 550 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும்.
மேலும், சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா், திருநெல்வேலி, நாகா்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஒசூா் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...