சென்னை: செங்குன்றத்திலிருந்து தாம்பரம் பேருந்து நிலையத்துக்கு 104 வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து, ஆட்டோ மீது மோதியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மதுரவாயல் அருகே இன்று(செப்.16) மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. செங்குன்றம் - தாம்பரம் நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், தடுப்புக் கம்பிகளை உடைத்துக் கொண்டு, அருகேயுள்ள சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் பயங்கரமாக மோதியுள்ளது. அதில் ஆட்டோ பலத்த சேதமடைந்தது. மேலும் பேருந்தின் முன்பக்கமும் சேதமடைந்துள்ளது.
இதன் காரணமாக, செங்குன்றம் - தாம்பரம் சாலையில், மதுரவாயல் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து: தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் கைது

நேபாளம்: சாலை விபத்தில் இரண்டு இந்தியர்கள் பலி

சென்னை மாநகரப் பேருந்து: பட்டன் போன் வைத்திருந்தால் மாதப் பயண அட்டை!

சென்னை மாநகரப் பேருந்து மாதப் பயண அட்டை இல்லையா? மக்கள் தவிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


