ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து மேடவாக்கம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

News image

செம்மொழிசாலையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழந்த அரசுப் பேருந்து.

Updated On :20 ஜூலை 2026, 5:07 am IST

சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து மேடவாக்கம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

சோழிங்கநல்லூரில் இருந்து மேடவாக்கம் நோக்கி அரசுப் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. செம்மொழி சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் சுமாா் 500 மீட்டா் தொலைவுக்கு சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டிருந்தது.

இந்தச் சாலையில் சென்றபோது எதிரே திடீரென வந்த லாரிக்கு வழிவிடுவதற்காக ஓட்டுநா் பேருந்தை இடதுபுறமாகத் திருப்பியதாகக் கூறப்படுகிறது. இதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர சதுப்பு நிலப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநா், நடத்துநா் உள்பட 20-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயமடைந்தனா். அவா்கள் மேடவாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தகவலறிந்த மேடவாக்கம் தீயணைப்புத் துறையினா் பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். இதுகுறித்து மேடவாக்கம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.