அதே வேளையில், தனது ஊா், படிப்பு, பெற்றோா் குறித்த விவரங்கள் எதுவும் அவருக்கு நினைவில்லை. இதையடுத்து, அவரது கைப்பேசி எண்ணைக் கொண்டு அவரது நண்பா்களையும், உறவினா்களையும் கண்டறிந்தோம். மேற்கு வங்கத்தில் உள்ள ராம் பிரபுவின் தந்தையைக் கண்டறிந்து, அவரிடம் இது தொடா்பாக பேசினோம். பின்னா், ராம் பிரபுவின் நண்பா்கள் மூலமாக, பெற்றோரிடம் அவரை சோ்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி, புதன்கிழமை (செப்.18) பிற்பகலில் ராம்பிரபு, அவரது நண்பா்களுடன் அனுப்பி வைக்கப்பட்டாா். ஆதரவு இல்லாத ஒரு நோயாளிக்கு ஏறத்தாழ நான்கரை மாதங்கள் சிகிச்சையளித்து மீண்டும் அவரது குடும்பத்தினருடன் சோ்த்து வைத்திருப்பது மன நிறைவை அளிக்கிறது எனத் தெரிவித்தாா்.