சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

சென்னை - திருவள்ளூர் ரயிலில் பயணிப்பவரா? பயண நேரம் மாறுகிறது!

சென்னை - திருவள்ளூர் இடையே பயணிப்போருக்கான பயண நேரம் மாறுகிறது!

News image

சென்னை - திருவள்ளூர் புறநகர் ரயில் சேவை

Updated On :24 செப்டம்பர் 2024, 2:48 pm IST

சென்னை புறநகர் ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளின் பயண நேரம் கூடுதலாக 10 நிமிடங்கள் அதிகரிக்கவிருக்கிறது.

அதாவது, சென்னை - திருவள்ளூர் இடையேயான பயண நேரம், தற்போதிருப்பதை விடவும் கூடுதலாக 10 நிமிடங்கள் அதிகரிக்கவிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதாவது, ஆவடி - அம்பத்தூர் இடையே மெட்ரோ குடிநீர் வாரியத்தின் குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதால், இந்தப் பகுதியில் அதாவது 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டும் ரயில்கள் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டும் இயக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது, இப்பகுதியில் ரயில்கள் 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த திங்கள்கிழமை, இப்பணிகளின்போது, தண்டவாளம் அருகே பிரச்னை ஏற்பட்டதால், காலை 8 மணி முதல், ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு, ரயில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

மெட்ரோ குடிநீர் வாரிய ஊழியர்கள் பராமரிப்புப் பணியை மேற்கொண்டபோது, குழாயில் உடைப்பு ஏற்பட்டதாகவும் இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. இதனால், 8 மணிக்கு நிறுத்தப்பட்ட ரயில் சேவை 9 மணிக்குத்தான் மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில்தான், பணிகள் முடியும் வரை இப்பகுதியில் ரயில் இயக்கப்படும் வேகத்தைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மெட்ரோ குடிநீர் பணிகள் முடிந்தபிறகு, மீண்டும் பழைய வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.