மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மேட்டூர் அருகே போக்கு காட்டி வந்த சிறுத்தை உயிரிழந்ததால் மக்கள் நிம்மதி

கொளத்தூர் பகுதியில் போக்கு காட்டி வந்த சிறுத்தை உயிரிழந்ததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

News image

வனப் பகுதியில் உயிரிழந்த சிறுத்தை.

Updated On :27 செப்டம்பர் 2024, 1:41 pm

கொளத்தூர் பகுதியில் போக்கு காட்டி வந்த சிறுத்தை உயிரிழந்ததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் ஒன்றியத்தில் புது வேலமங்கலம், வெள்ளக்கரட்டூர் மற்றும் கருங்கரடு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 8ஆம் தேதி முதல் சிறுத்தை ஒன்று கிராமத்தில் நுழைந்து 50 மேற்பட்ட ஆடுகளை வேட்டையாடி வந்தது.

இதனிடையே வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று கொளத்தூர் அருகே வனப் பகுதியில் சிறுத்தை மர்மமாக இறந்து கிடந்தது.

இதனைக் கண்ட கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த சிறுத்தையின் உடலை மீட்டு சம்பவ இடத்திலேயே உடற்கூராய்வு செய்தனர். பின்னர் வனப் பகுதியில் தீ வைத்து அடக்கம் செய்தனர்.

பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் போக்கு காட்டி வந்த சிறுத்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது. இருப்பினும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.