சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

எங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடுவோம் - மதிமுக

நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை தங்களது கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று மதிமுக தெரிவித்துள்ளது. 

News image
Updated On :4 பிப்ரவரி 2024, 7:34 am

DIN

நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை தங்களது கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று மதிமுக தெரிவித்துள்ளது. 

மக்களவைத் தோ்தலையொட்டி திமுக - மதிமுக கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டபேச்சுவாா்த்தை சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் திமுக சார்பில் தொகுதிப் பங்கீட்டு குழுவும், மதிமுக நிர்வாகிகளும் பங்கேற்றனர். 

திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடனான பேச்சுவார்த்தைக்கு பின் மதிமுக நிர்வாகிகள் அளித்த பேட்டியில், நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை எங்கள் கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவோம். 2 மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை இடங்களை திமுகவிடம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

கடந்த முறை ஈரோடு தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை மதிமுகவுக்கு திமுக வழங்கியது. ஆனால் இம்முறை அக்கட்சி கூடுதலாக ஒரு மக்களவைத் தொகுதியை திமுகவிடம் கேட்டுள்ளது. மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

முன்னதாக இன்று காலை திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தொடர்ந்து மதிமுகவுடனும் தனது முதற்கட்டபேச்சுவாா்த்தையில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.