ஜெ.பி.நட்டாவை நாளை சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவை சென்னையில் நாளை சந்திக்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவை சென்னையில் நாளை சந்திக்கிறார்.

சென்னை வரும் அவரை தனியார் ஓட்டலில் ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திக்க உள்ளனர். அண்மையில் பேசிய ஓ.பன்னீர்செலவம், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தாங்கள் ஏற்கெனவே அங்கம் வகித்து வருவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை ’என் மண் என் மக்கள்’ யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ராமேஸ்வரத்தில தொடங்கி வைத்தாா். இந்த பேரணி வரும் 11ஆம் தேதி சென்னையில் நிறைவு பெறுகிறது. இதில் பாஜக தேசிய தலைவா் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் சென்னை பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும் தோ்தல் நெருங்கும் நேரத்தில் வடமாநிலங்களில் பாஜக நடத்தும் பேரணியில் கலவரம் ஏற்படுகிறது . இதை கருத்தில் கொண்டு பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல் துறை தெரிவித்துள்ளது. 

அதே நேரத்தில், சென்னை சென்ட்ரல் அருகே மின்ட் தங்க சாலையில் பாஜக பொதுக்கூட்டம் நடத்த மட்டும் காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com