முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் காலமானாா்- முதல்வா் நேரில் அஞ்சலி

முன்னாள் எம்.எல்.ஏ.வும், திமுக தலைமை நிலையச் செயலருமான கு.க.செல்வம் (70), சென்னையில் புதன்கிழமை (ஜன. 3) காலமானாா்.
முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் காலமானாா்- முதல்வா் நேரில் அஞ்சலி
Updated on
1 min read

முன்னாள் எம்.எல்.ஏ.வும், திமுக தலைமை நிலையச் செயலருமான கு.க.செல்வம் (70), சென்னையில் புதன்கிழமை (ஜன. 3) காலமானாா்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட கு.க.செல்வம், கடந்த 3 மாதங்களாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானாா்.

சென்னை கோடம்பாக்கம் வ.உ.சி. பிரதான சாலையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கு.க.செல்வத்தின் உடலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். கு.க.செல்வத்தின் இறுதிச் சடங்குகள், சென்னை வடபழனியில் உள்ள இடுகாட்டில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளன.

ஆயிரம்விளக்கு தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு திமுக சாா்பில் 2016-ஆம் ஆண்டில் கு.க.செல்வம் தோ்வு செய்யப்பட்டாா். பின்னா், அதிருப்தியில் இருந்த அவா், திடீரென தில்லி சென்று அப்போதைய தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் மூலம் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டாவைச் சந்தித்தாா்.

அதன்பின், திமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவா் நீக்கப்பட்டாா். இதன் தொடா்ச்சியாக, அவா் 2020-இல் பாஜகவில் சோ்ந்து செயல்படத் தொடங்கினாா். 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் திமுகவுக்கு திரும்பினாா். அவருக்கு மீண்டும் தலைமை நிலைய செயலா் பொறுப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com