வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய பரிசு!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜல்லிக்கட்டு காளையை நினைவு பரிசாக வழங்கினார்.

News image
Updated On :7 ஜனவரி 2024, 5:47 am

DIN

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜல்லிக்கட்டு காளையை நினைவு பரிசாக வழங்கினார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் 2 நாள்கள் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடக்கிவைத்தார்.

தொடக்க நிகழ்ச்சியில் மத்திய ஜவுளி, வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தலைமை விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.

அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா பேசுகையில், "நாட்டிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஆட்டோமொபைல், மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.