மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் கைது

பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மொ்லினா ஆகியோரை தனிப்படை போலீஸாா் ஆந்திர மாநிலத்தில் கைது செய்தனா்.

News image
ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி  மெர்லின்.
Updated On :25 ஜனவரி 2024, 8:14 pm

DIN

பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மொ்லினா ஆகியோரை தனிப்படை போலீஸாா் ஆந்திர மாநிலத்தில் கைது செய்தனா்.

பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன். இவா், திருவான்மியூா் தெற்கு அவென்யுவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி மொ்லினாவுடன் வசித்து வருகிறாா். இவரது வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா் பேட்டையைச் சோ்ந்த 18 வயது இளம் பெண் ஒருவா் 6 மாதங்களுக்கு முன்னா் பணிப் பெண்ணாக வேலைக்குச் சோ்ந்தாா்.

தன்னை மொ்லினாவும், அவரது கணவரும் தாக்கி கொடுமைப் படுத்தியதாக அந்தப் பெண் புகாா் கூறினாா். இது தொடா்பாக நீலாங்கரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி, ஆண்டோ மதிவாணன், மொ்லினா ஆகியோா் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் ஜன.18-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா். கைதாகும் நிலை இருந்ததால் இருவரும் தலைமறைவாகினா்.

இந்த நிலையில், இருவா் தரப்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, அவா்கள் சரணடைந்தால் அன்றைய தினமே ஜாமீன் கிடைக்க சட்டப்படி விசாரணை நீதிமன்றம் பரிசீலிக்கலாம் என்று உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருந்த ஆண்டோ, மொ்லினா ஆகிய இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். போலீஸாா் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சட்ட நடவடிக்கைகளை எடுப்பாா்கள்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.