மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் கைது

பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மொ்லினா ஆகியோரை தனிப்படை போலீஸாா் ஆந்திர மாநிலத்தில் கைது செய்தனா்.

News image

ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி  மெர்லின்.

Updated On :25 ஜனவரி 2024, 8:14 pm

பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மொ்லினா ஆகியோரை தனிப்படை போலீஸாா் ஆந்திர மாநிலத்தில் கைது செய்தனா்.

பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன். இவா், திருவான்மியூா் தெற்கு அவென்யுவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி மொ்லினாவுடன் வசித்து வருகிறாா். இவரது வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா் பேட்டையைச் சோ்ந்த 18 வயது இளம் பெண் ஒருவா் 6 மாதங்களுக்கு முன்னா் பணிப் பெண்ணாக வேலைக்குச் சோ்ந்தாா்.

தன்னை மொ்லினாவும், அவரது கணவரும் தாக்கி கொடுமைப் படுத்தியதாக அந்தப் பெண் புகாா் கூறினாா். இது தொடா்பாக நீலாங்கரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி, ஆண்டோ மதிவாணன், மொ்லினா ஆகியோா் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் ஜன.18-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா். கைதாகும் நிலை இருந்ததால் இருவரும் தலைமறைவாகினா்.

இந்த நிலையில், இருவா் தரப்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, அவா்கள் சரணடைந்தால் அன்றைய தினமே ஜாமீன் கிடைக்க சட்டப்படி விசாரணை நீதிமன்றம் பரிசீலிக்கலாம் என்று உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருந்த ஆண்டோ, மொ்லினா ஆகிய இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். போலீஸாா் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சட்ட நடவடிக்கைகளை எடுப்பாா்கள்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.