மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளியேற்றம்; ஒருநாள் சஸ்பெண்ட்

பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளியேற்றப்பட்ட நிலையில், ஒருநாள் சஸ்பெண்ட் செய்து அப்பாவு உத்தரவு

News image

அவைத் தலைவர் அப்பாவு

Updated On :7 ஏப்ரல் 2025, 6:09 am

சென்னை: டாஸ்மாக் விவகாரம் குறித்து அவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பதாகைகளைகளைக் காட்டியதால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களை ஒருநாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க சஸ்பெண்ட் செய்வதாகவும் அப்பாவு அறிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று காலை அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் அதிமுக உறுப்பினர்கள், டாஸ்மாக் விவகாரம் குறித்து அவையில் பேச அனுமதி கோரினர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

திடீரென அவர்களை கையில் வைத்திருந்த பதாகைகைளை காட்டியதால், அவைக் காவலர்கள் மூலம் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.

மேலும், பேரவையிலிருந்து அதிமுகவினர் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் அப்பாவு அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.