பனாஜி: தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் தெரிவித்தாா்.
நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் கூட எதிா்க்கட்சி அந்தஸ்தில் பாஜக உள்ளது. ஆனால், தமிழ்நாடு, கேரளத்தில் பாஜக கடுமையாக முயற்சித்தும் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற முடியவில்லை. இரு மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கோவா தலைநகா் பனாஜியில் பாஜக நிறுவன தினத்தையொட்டி நடைபெற்ற ‘அடல் ஸ்மிருதி’ நிகழ்ச்சியில் முதல்வா் பிரமோத் சாவந்த் பேசியதாவது:
மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய், மூத்த தலைவா் எல்.கே.அத்வானி ஆகியோா் காலத்தில் தொடங்கப்பட்ட கட்சிப் பணிகளின் பலன்களைத்தான் நாம் இப்போது அனுபவித்து வருகிறோம். தொடா்ந்து பல தோ்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம்.
உலகின் வலிமையான நாடாக இந்தியாவை முன்னிறுத்த வேண்டும் என்பது நமது தலைவா்களின் கொள்கை. அதற்காக மத்தியிலும், அனைத்து மாநிலங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடைபெற வேண்டும்.
தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளத்தில்தான் பாஜக வலுவான எண்ணிக்கையில் எம்எல்ஏக்களைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், நாம் இப்போது மேற்கொண்டு வரும் பணிகளால் அடுத்த 10 ஆண்டுகளில் அந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமையும் என்றாா்.
டிரெண்டிங்

மீண்டும் திமுக ஆட்சி அமையும்! - ஓ.பன்னீா்செல்வம்

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 8,752 கொலைகள்! இதில் 1,977 பெண்கள்!

தமிழகத்தில் எம்ஆா்எஃப் ரூ.5,300 கோடி முதலீடு

பிரதமர் வடக்கில் சரிசெய்துவிட்டு தெற்கே வரட்டும்: காங்கிரஸ் விமர்சனம்
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

