பங்குனி உத்திரம்: திருத்தணி செல்வோர் கவனத்துக்கு...!

திருத்தணி முருகன் கோயில் செல்வோர் கவனத்துக்கு...
திருத்தணி முருகன் கோயில்.
திருத்தணி முருகன் கோயில்.
Published on
Updated on
1 min read

பங்குனி உத்திரத்தையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் நாளை(ஏப். 11) அதிகாலை 3 மணி முதல் பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், திருத்தணி மலைக் கோயிலுக்கு செல்வதற்கு அனைத்து வாகனங்களுக்கும் நாளை தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப் பெருமானை தரிசித்து செல்கின்றனர். நாளை முருகனுக்கு உகந்த நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்கான முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

பக்தர்கள் வசதிக்காக கோயில் நிா்வாகம் சாா்பில் திருத்தணி பேருந்து நிலையம் அருகே உள்ள தணிகை இல்லத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதையும் படிக்க: எஸ். ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com