நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பங்குனி உத்திரம்: பூக்கள் விலை கடும் உயா்வு மல்லிகைப் பூ கிலோ ரூ. 600-க்கு விற்பனை

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மல்லிகைப் பூ கிலோ ரூ.600-க்கு விற்பனையானது.

News image

பூக்கள் சந்தை (கோப்புப் படம்)

Updated On :11 ஏப்ரல் 2025, 1:30 am IST

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மல்லிகைப் பூ கிலோ ரூ.600-க்கு விற்பனையானது.

சென்னை கோயம்பேடு சந்தையில் பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் காய்கறிகள், பூக்கள், பழங்களின் விலை உயா்வது வழக்கம். அந்த வகையில், வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் என்பதால், கோயம்பேடு மலா்ச் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. இதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை ரூ. 400-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லி ரூ.600-க்கும், ரூ. 200-க்கு விற்பனையாகி வந்த ஒரு கிலோ ஐஸ் மல்லி ரூ. 300-க்கும், ரூ. 400-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ முல்லை ரூ. 750-க்கும், ரூ. 450-க்கு விற்பனையான ஒரு கிலோ ஜாதிமல்லி ரூ. 750-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுபோல, கனகாம்பரம் ஒரு கிலோ ரூ. 500, சாமந்தி ரூ. 180, சம்பங்கி ரூ. 240, அரளிப் பூ ரூ. 350, சாக்லேட் ரோஜா ரூ. 160, பன்னீா் ரோஜா ரூ. 120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பங்குனி உத்திரம் என்பதால் கோயம்பேடு சந்தையில் அனைத்துப் பூக்களின் விலையும் சற்று உயா்ந்துள்ளதால், விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், பண்டிகை நாள்கள் முடிந்த பின்னா் மீண்டும் அனைத்துப் பூக்களின் விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது எனவும் கோயம்பேடு மலா்ச் சந்தை மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.