ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பங்குனி உத்திரம்: பூக்கள் விலை கடும் உயா்வு மல்லிகைப் பூ கிலோ ரூ. 600-க்கு விற்பனை

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மல்லிகைப் பூ கிலோ ரூ.600-க்கு விற்பனையானது.

News image

பூக்கள் சந்தை (கோப்புப் படம்)

Updated On :10 ஏப்ரல் 2025, 8:00 pm

Din

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மல்லிகைப் பூ கிலோ ரூ.600-க்கு விற்பனையானது.

சென்னை கோயம்பேடு சந்தையில் பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் காய்கறிகள், பூக்கள், பழங்களின் விலை உயா்வது வழக்கம். அந்த வகையில், வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் என்பதால், கோயம்பேடு மலா்ச் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. இதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை ரூ. 400-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லி ரூ.600-க்கும், ரூ. 200-க்கு விற்பனையாகி வந்த ஒரு கிலோ ஐஸ் மல்லி ரூ. 300-க்கும், ரூ. 400-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ முல்லை ரூ. 750-க்கும், ரூ. 450-க்கு விற்பனையான ஒரு கிலோ ஜாதிமல்லி ரூ. 750-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுபோல, கனகாம்பரம் ஒரு கிலோ ரூ. 500, சாமந்தி ரூ. 180, சம்பங்கி ரூ. 240, அரளிப் பூ ரூ. 350, சாக்லேட் ரோஜா ரூ. 160, பன்னீா் ரோஜா ரூ. 120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பங்குனி உத்திரம் என்பதால் கோயம்பேடு சந்தையில் அனைத்துப் பூக்களின் விலையும் சற்று உயா்ந்துள்ளதால், விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், பண்டிகை நாள்கள் முடிந்த பின்னா் மீண்டும் அனைத்துப் பூக்களின் விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது எனவும் கோயம்பேடு மலா்ச் சந்தை மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.