நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

திருவண்ணாமலை: அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; 4 பேர் பலி!

அரசுப் பேருந்து - கார் விபத்து தொடர்பாக...

News image
Updated On :13 ஏப்ரல் 2025, 9:30 am IST

கீழ்பென்னாத்தூர் அருகே இன்று அதிகாலை காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.

லாரி உரிமையாளர்கள் 4 பேர் புதுச்சேரியில் இருந்து சொந்த வேலைக் காரணமாக பெங்களூரு சென்று, அங்கு பணி முடித்துக் கொண்டு மீண்டும் இன்று(ஏப். 13) அதிகாலை திருவண்ணாமலை வழியாக புதுச்சேரி நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

Story image

அப்போது, கீழ்பென்னாத்தூர் அடுத்த சோ. காட்டுக்குளம் பகுதி அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, அரசுப் பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்டாலின், சதீஷ்குமார், சைலேஷ்குமார், சரோப் உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சைலேஷ்குமார், சதீஷ்குமார், சரோப், ஸ்டாலின்.

சைலேஷ்குமார், சதீஷ்குமார், சரோப், ஸ்டாலின்.

கீழ்பென்னாத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்களை அனுப்பி வைத்தனர்.

கார் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் கார் ஓட்டியதால் இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.