வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கள்ளக்குறிச்சி அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

ஏரியில் குளிக்கச் சென்ற இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை (ஏப். 14) உயிரிழந்தனர்.

News image

ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரு மாணவிகள் ஸ்வேதா, சிவசக்தி

Updated On :14 ஏப்ரல் 2025, 8:34 pm IST

பாசார் கிராமத்தில் உள்ள சித்தேரியில் குளிக்கச் சென்ற இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை (ஏப். 14) உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்துக்குட்பட்ட பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகள் ஸ்வேதா (12). இவர் இதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே போல சிவக்குமார் என்பவர் மகள் சிவசக்தி (11). இவர் அதே பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

ஸ்வேதா அவரது பாட்டி அய்யம்மாள் வீட்டில் தங்கி பயின்று வந்தார். சிவசக்தியும் அவரது பாட்டி செல்வி வீட்டில் தங்கி பயின்று வந்தார். திங்கள்கிழமை தமிழ் வருடப் பிறப்பு என்பதால் பள்ளி விடுமுறை நாள் ஆகும். அதனால் சக தோழிகளுடன் திங்கள்கிழமை பிற்பகல் ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது தண்ணீர் மூழ்கி விட்டனர். இவருடன் சென்ற தோழிகள் கூச்சலிடவே அருகிலிருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கி தூக்கியபோது இருவரும் உயிரிழந்து தெரியவந்தது.

தவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார் நிகழ்விடத்திற்குச் சென்று உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.