ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தமிழகத்தில் ஏப்.18 வரை வெயில் அதிகரிக்கும், மழைக்கும் வாய்ப்பு

News image
வெயில் அதிகரிக்கும்- Center-Center-Chennai
Updated On :14 ஏப்ரல் 2025, 8:25 pm

Din

சென்னை: தமிழக உள்மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்.15) முதல் ஏப்.18-ஆம் தேதி வரை வெப்பம் சற்று அதிகரிக்கும். இருப்பினும் சில மாவட்டங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 101.18 டிகிரி ஃபாரன்ஹீட்டும், திருச்சி மற்றும் திருத்தணியில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது. மேலும், செவ்வாய்க்கிழமை (ஏப்.15) முதல் ஏப்.18-ஆம் தேதி வரை தமிழக உள்மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.15-இல் அதிகபட்ச வெப்பநிலை 101 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழைக்கு வாய்ப்பு: மன்னாா் வளைகுடாவில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஏப்.15 முதல் 18-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை கன்னியாகுமரி மாவட்டம், பெருஞ்சாணி அணை மற்றும் புத்தன் அணை பகுதிகளில் தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், துறையூா் (திருச்சி), நடுவட்டம் (நீலகிரி) ஆகிய பகுதிகளில் தலா 40 மி.மீ. பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.