தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சியில் பராமரிப்புப் பணி: ரயில்கள் பகுதி ரத்து!

திருச்சியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சில ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.

News image
Updated On :15 ஏப்ரல் 2025, 8:14 am

DIN

திருச்சியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சில ரயில்களின் சேவை, பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

காலை 9.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில் மற்றும்

பிற்பகல் 1.40 மணி விழுப்புரம் - சென்னை கடற்கரை பயணிகள் ரயில், விக்கிரவாண்டி - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

Story image

அதேபோல காலை 6.35 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - புதுச்சேரி பயணிகள் ரயில், விழுப்புரம் - புதுச்சேரி இடையிலும்

பிற்பகல் 3 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் புதுச்சேரி - திருப்பதி ரயில், புதுச்சேரி - முண்டியம்பாக்கம் இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.