பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

பரபரப்பான சூழலில் கூடிய மதிமுக நிர்வாகக் குழு!

மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் தொடர்பாக...

News image
வைகோ- கோப்புப் படம்
Updated On :20 ஏப்ரல் 2025, 5:10 am

DIN

பரபரப்பான சூழலில் மதிமுக நிர்வாகக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நிர்வாகக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வைகோ, துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ அறிவித்தது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், நிர்வாகக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

துரை வைகோவுக்கும், கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யா இடையே பனிப்போர் நிலவுவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்த கூட்டத்தில் உள்கட்சி பிரச்னை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.