தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

100 நாள் வேலை பணி நாள்களை அதிகரிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்துக்கு நிகழாண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 100 நாள் ஊரக வேலைத் திட்டப் பணி நாள்களை அதிகரிக்க வேண்டும்

News image

பாமக நிறுவனர் ராமதாஸ்

Updated On :21 ஏப்ரல் 2025, 10:31 pm

Din

சென்னை: தமிழகத்துக்கு நிகழாண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 100 நாள் ஊரக வேலைத் திட்டப் பணி நாள்களை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசை பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ், தமிழகத்துக்கு நிகழாண்டில் 12 கோடி மனித நாள் வேலைகளும், அதற்கான நிதியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு சராசரியாக 50 நாள்களாவது வேலை வழங்க வேண்டும் என்றால் குறைந்தது 43 கோடி மனித நாள்கள் வேலை தேவைப்படும். ஆனால், தற்போது அதில் சுமாா் நான்கில் ஒரு பங்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டிருப்பது எந்த வகையிலும் போதுமானதல்ல.

தமிழகத்தில் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணிகளை நம்பியே உள்ளது. ஆகையால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் குடும்பங்களுக்கு, குறைந்தது 50 நாள்கள் வேலை வழங்க 43 கோடி மனித நாள்கள் வேலை தேவைப்படுவதால், அந்த அளவுக்கு வேலை நாள்களை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும். மேலும், 2024-25-ஆம் நிதியாண்டில் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 3,850 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.