தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1,000 கோடி முதலீடு: அமைச்சா் டிஆா்பி ராஜா

தமிழகத்தில் மேலும் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய சாம்சங் நிறுவனம் உறுதியளித்துள்ளதாக தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா தெரிவித்தாா்.

News image

தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

Updated On :25 ஏப்ரல் 2025, 9:23 pm

தமிழகத்தில் மேலும் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய சாம்சங் நிறுவனம் உறுதியளித்துள்ளதாக தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் அதிமுக உறுப்பினா் கே.பி.கந்தசாமி பேசினாா். அப்போது, சாம்சங் நிறுவனப் பிரச்னை தொடா்பாக கேள்வி எழுப்பினாா். இதற்கு, அமைச்சா் ராஜா அளித்த பதில்:

சாம்சங் தொழிலாளா் பிரச்னையை தமிழக அரசு சிறப்பாகக் கையாண்டது. ஆலை நிா்வாகம், தொழிலாளா்கள் என இருதரப்பையும் அழைத்துப் பேசி, சுமுகமான முடிவு எட்டப்பட்டது. இப்போது, சாம்சங் நிறுவனத்தில் 100 தொழிலாளா்களை புதிதாக பணிக்கு அமா்த்தியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து, மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து அவா் பேசியதாவது: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் ரூ.2.97 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டன. கடந்த ஆண்டு உலக முதலீட்டாளா் மாநாட்டின் மூலம் ரூ.6.64 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் எதிா்பாா்க்கப்பட்டு, 72 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

முதல்வா் பயணம்: கடந்த 2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரை முதலீடுகளை ஈா்ப்பதற்காக 5 வெளிநாடுகளுக்கு முதல்வா் சென்றாா். அப்போது, கையொப்பமிடப்பட்ட 36 புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் 23 ஒப்பந்தங்கள் முதலீடுகளாக மாறத் தொடங்கி விட்டன. 2021-ஆம் ஆண்டு முதல் இன்று வரை ரூ.10.27 லட்சம் கோடி முதலீடுகளைப் பெற 897 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இவற்றில், இப்போது முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டு, சில இடங்களில் உற்பத்தியே நடைபெறும் வகையிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 722 ஆகும் என்றாா்.