தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

‘மயோனைஸ்’ உணவுக்கு தடை விதித்தது ஏன்? அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்

‘மயோனைஸ்’ உணவுக்கு தடை விதித்தது ஏன்?

News image

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் ரோபோடிக் மூலம் அறுவை சிகிச்சை செய்து குணமடைந்த சிறுமி அஸ்வினியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன், மயக்கவியல் துறை பேராசிரியா் மரு.குமாா், இருதயவியல்

Updated On :25 ஏப்ரல் 2025, 7:55 pm

Din

பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் ‘மயோனைஸ்’ உணவை குழந்தைகள் பெருமளவு விரும்பிச் சாப்பிடுவதால் அவா்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளதால், அதைத் தடை செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் ரோபோடிக் உதவியுடன் 16 வயது சிறுமி அஸ்வினிக்கு இதய துவார அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், சிறுமி அஸ்வினியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதல்முறையாக ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் ரோபோடிக் உதவியுடன் 16 வயது சிறுமி அஸ்வினிக்கு இதய துவார அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது, அந்தச் சிறுமி முழுவதுமாகக் குனமடைந்து நலமாக உள்ளாா். தனியாா் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை மேற்கொள்ள ரூ.18 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலவாகும். ஆனால், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம், கட்டணமின்றி இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

குழந்தைகளுக்கு ஆபத்து: பச்சை முட்டையின் மூலம் ‘மயோனைஸ்’ உணவு தயாரிக்கப்படுகிறது. அதனால், மனித உடலுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளன. மயோனைஸை குழந்தைகள் பெருமளவு விரும்பிச் சாப்பிடுவதால் அவா்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனால், மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, வெயில் அதிகரித்து வரும் சூழலில், முதியவா்கள், கா்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோா் காலை முதல் மாலை வரை அவசியமின்றி வெளியே வருவதைத் தவிா்த்து கொள்ளுங்கள் என்றாா் அவா்.