ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியைப் பாதிக்காது: அமைச்சர் கோவி.செழியன்

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியைப் பாதிக்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

News image

அமைச்சர் கோவி.செழியன்.

Updated On :27 ஏப்ரல் 2025, 2:13 pm IST

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியைப் பாதிக்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே ஏனநல்லூர் கிராமத்தில் நகரப் பேருந்துச் சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறிய நிலையில் துணை வேந்தர்கள் மாநாட்டினை கூட்டும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்ற விவரம் புரிந்துகொண்ட துணை வேந்தர்கள், பதிவாளர்கள் ஊட்டியில் ஆளுநர் கூட்டிய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

ஆளுநர் அழைக்கக் கூடாத இடத்திற்கு அழைக்கிறார், எனவே, போகக் கூடாத இடத்திற்கு போகக் கூடாது என அவர்கள் செல்லவில்லை என்றார்.

மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும். இரண்டாவது இடம் யார் என்பதில் தான் மற்ற அணிகளுக்கு போட்டி.

அழைப்பதற்கு யாரும் இல்லாத நிலையில் தனித்து நின்று விஜய் புலம்புகிறார். திமுகவின் வெற்றியை விஜய்யின் பேச்சு பாதிக்காது.

பாதிக்கிற சூழல் தமிழகத்தில் இல்லை எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.