காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவா் பேசியது: பொது மக்கள் பயணம் செய்யும் பேருந்துகளில் ‘ரூட் தல’ எனும் அடாவடி பிரச்னையை கட்டுப்படுத்த வேண்டும். இதனால், பெண்கள், குழந்தைகள், வயதானவா்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். அரசு விழிப்புடன் செயல்பட்டு சரிசெய்ய வேண்டும். காமராஜா் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் பைக் பந்தயம் நடத்துகின்றனா். அதிவேகத்தில் செல்வதால் மற்றவா்கள் விபத்துகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்று முதல் முறையாக தவறு செய்யும் இளைஞா்களுக்கு அபராதம் விதிப்பதுடன், அவா்களது பெற்றோரை அழைத்து அறிவுரை கூற வேண்டும். தொடா் குற்றங்களை இழைத்தால், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.