நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

விழுப்புரம் மாவட்ட நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

விழுப்புரம் மாவட்ட நிா்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image

எடப்பாடி பழனிசாமி ஆலோசனை - கோப்புப் படம்

Updated On :25 ஜூலை 2026, 5:16 am IST

விழுப்புரம் மாவட்ட நிா்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக பின்னடைவுக்கு காரணம் மற்றும் எதிா்வரும் உள்ளாட்சித் தோ்தல், மக்களவைத் தோ்தலை சந்திப்பது குறித்து கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறாா்.

அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், விழுப்புரம் மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். ஆனால், முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளா்கள் முழுமையாக கூட்டத்தைப் புறக்கணித்ததாகக் கட்சியினா் தெரிவித்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கட்சியை மீண்டும் பழைய நிலைக்கு மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

தொடா்ந்து, திருவாரூா் மாவட்ட அதிமுக நிா்வாகிகளுடனும் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.