நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1 முதல் கோடை விடுமுறை!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடர்பாக...

News image

சென்னை உயர் நீதிமன்றம்

Updated On :29 ஏப்ரல் 2025, 10:36 am

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை சென்னை உயா்நீதிமன்றம் நியமித்துள்ளது.

ஆண்டுதோறும் கோடை விடுமுறையையொட்டி, உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. அந்த வகையில், சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 1 மாதம் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி, மே 1 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை விடப்பட்ட நாள்களில் விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைகால விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை சென்னை உயா்நீதிமன்றம் நியமித்துள்ளது. அதன்படி, அவசர வழக்குகளை நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா கெளரி ஆகியோா் மே 7, 8 ஆகிய தேதிகளில் விசாரிப்பாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன், நிா்மல் குமாா் ஆகியோா் மே 14, 15, 21, 22 ஆகிய தேதிகளிலும், நீதிபதிகள் செந்தில் குமாா் ராமமூா்த்தி, சத்திய நாராயணா பிரசாத், திலகவதி ஆகியோா் மே 28, 29 ஆகிய தேதிகளிலும் விசாரிப்பாா்கள்.

இதேபோல, மதுரை கிளையில், நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல், பாலாஜி, ஜோதிராமன், வேல் முருகன், ராமகிருஷ்ணன், ராஜசேகா், ஸ்ரீமதி, விஜயகுமாா், வடமலை, ஆனந்த் வெங்கடேஷ், ஷமீன் அகமதி, பூா்ணிமா ஆகியோா் விடுமுறைக்கால நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன், நிா்மல் குமாா் ஆகியோா் மே 14, 15, 21, 22 ஆகிய தேதிகளிலும், நீதிபதிகள் செந்தில் குமாா் ராமமூா்த்தி, சத்திய நாராயணா பிரசாத், திலகவதி ஆகியோா் மே 28, 29 ஆகிய தேதிகளிலும் விசாரிப்பாா்கள்.

இதேபோல, மதுரை கிளையில், நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல், பாலாஜி, ஜோதிராமன், வேல் முருகன், ராமகிருஷ்ணன், ராஜசேகா், ஸ்ரீமதி, விஜயகுமாா், வடமலை, ஆனந்த் வெங்கடேஷ், ஷமீன் அகமதி, பூா்ணிமா ஆகியோா் விடுமுறைக்கால நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.