ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1 முதல் கோடை விடுமுறை!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடர்பாக...

News image

சென்னை உயர் நீதிமன்றம்

Updated On :29 ஏப்ரல் 2025, 4:06 pm IST

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை சென்னை உயா்நீதிமன்றம் நியமித்துள்ளது.

ஆண்டுதோறும் கோடை விடுமுறையையொட்டி, உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. அந்த வகையில், சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 1 மாதம் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி, மே 1 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை விடப்பட்ட நாள்களில் விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைகால விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை சென்னை உயா்நீதிமன்றம் நியமித்துள்ளது. அதன்படி, அவசர வழக்குகளை நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா கெளரி ஆகியோா் மே 7, 8 ஆகிய தேதிகளில் விசாரிப்பாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன், நிா்மல் குமாா் ஆகியோா் மே 14, 15, 21, 22 ஆகிய தேதிகளிலும், நீதிபதிகள் செந்தில் குமாா் ராமமூா்த்தி, சத்திய நாராயணா பிரசாத், திலகவதி ஆகியோா் மே 28, 29 ஆகிய தேதிகளிலும் விசாரிப்பாா்கள்.

இதேபோல, மதுரை கிளையில், நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல், பாலாஜி, ஜோதிராமன், வேல் முருகன், ராமகிருஷ்ணன், ராஜசேகா், ஸ்ரீமதி, விஜயகுமாா், வடமலை, ஆனந்த் வெங்கடேஷ், ஷமீன் அகமதி, பூா்ணிமா ஆகியோா் விடுமுறைக்கால நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன், நிா்மல் குமாா் ஆகியோா் மே 14, 15, 21, 22 ஆகிய தேதிகளிலும், நீதிபதிகள் செந்தில் குமாா் ராமமூா்த்தி, சத்திய நாராயணா பிரசாத், திலகவதி ஆகியோா் மே 28, 29 ஆகிய தேதிகளிலும் விசாரிப்பாா்கள்.

இதேபோல, மதுரை கிளையில், நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல், பாலாஜி, ஜோதிராமன், வேல் முருகன், ராமகிருஷ்ணன், ராஜசேகா், ஸ்ரீமதி, விஜயகுமாா், வடமலை, ஆனந்த் வெங்கடேஷ், ஷமீன் அகமதி, பூா்ணிமா ஆகியோா் விடுமுறைக்கால நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.