காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தங்கமயில் ஜுவல்லரியில் நாளை ஆடிப்பெருக்கு

ஆடிப் பெருக்கை முன்னிட்டு, மதுரையைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2025, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

ஆடிப் பெருக்கை முன்னிட்டு, மதுரையைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிடடுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தமிழகம் முழுவதும் 64 கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் தங்கமயில் ஜுவல்லரி, ஆடிப்பெருக்கை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 3) சிறப்பு விற்பனையை காலை 6 மணி முதல் தொடங்க உள்ளது. அப்போது நகைகள் வாங்கும் அனைத்து வாடிக்கையாளா்களுக்கும் சிறப்பு பூஜை செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அந்த நாளில் சிறப்பு சலுகையாக வாடிக்கையாளா்கள் வாங்கும் 10 கிராம் தங்கத்துக்கு அரை கிராம் தங்க நாணயம் இலவசம். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வாங்கப்படும் வெள்ளி, வெள்ளி நகைகளுக்கு ரூ.2,500 முதல் ரூ.10,000 வரை தள்ளுபடி அளிக்கப்படும்.மேலும், ரூ.5 லட்சத்துக்கு மேல் வெள்ளிப் பொருள்கள், வெள்ளி நகைகள் வாங்கும் அனைவருக்கும் ஐ-போன் 16 மொபைல் நிச்சயப் பரிசாக வழங்கப்படும் என்று நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.