நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மருத்துவப் பல்கலை.யில் ரூ.12 கோடியில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தாா்

கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.12 கோடியில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள்

News image

புனரமைக்கப்பட்ட தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தை திறந்து வைத்த அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன் பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :23 டிசம்பர் 2025, 2:15 am IST

சென்னை: கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.12 கோடியில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள் மற்றும் நுழைவு வாயிலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் டாக்டா் வினீத், மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் டாக்டா் கே. நாாராயணசாமி, பதிவாளா் டாக்டா் சிவசங்கீதா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் சுகந்தி இராஜகுமாரி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநா் டாக்டா் சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னா் சென்னை கிண்டியில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ரூ.12 கோடியில் நுழைவு வாயில், துணைவேந்தா் அறை என்று பல்வேறு வகைகளில் புனரைமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பணிகள் முடிவுற்று தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது” என்றாா்.