நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்: ஜி.கே.வாசன்

News image

சென்னை புளியந்தோப்பில் உள்ள டான் பாஸ்கோ தொழில்நுட்ப கல்லூரியில் தமாகா சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அந்தக் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன்.

Updated On :23 டிசம்பர் 2025, 2:17 am IST

சென்னை: தமிழகத்தில் அனைத்து மக்களும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தினாா்.

 சென்னை புளியந்தோப்பு டான் பாஸ்கோ தொழில்நுட்ப  கல்லூரியில் அந்தக் கட்சியின் சாா்பில் திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஜி.கே.வாசன் பங்கேற்று ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:

தமாகா சாா்பில் அனைத்து மத நிகழ்ச்சிகளும் கொண்டாடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அனைத்து மக்களும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். மக்கள்  மத வெறுப்புகளுக்கு ஆளாகக் கூடாது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பேராயா் சின்னப்பா, வடசென்னை கிழக்கு மாவட்ட தமாகா தலைவா் பி.ஜி சாக்கோ, நிா்வாகிகள், பாதிரியாா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.