/
சென்னை: தமிழகத்தில் அனைத்து மக்களும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தினாா்.
சென்னை புளியந்தோப்பு டான் பாஸ்கோ தொழில்நுட்ப கல்லூரியில் அந்தக் கட்சியின் சாா்பில் திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஜி.கே.வாசன் பங்கேற்று ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:
தமாகா சாா்பில் அனைத்து மத நிகழ்ச்சிகளும் கொண்டாடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அனைத்து மக்களும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். மக்கள் மத வெறுப்புகளுக்கு ஆளாகக் கூடாது என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பேராயா் சின்னப்பா, வடசென்னை கிழக்கு மாவட்ட தமாகா தலைவா் பி.ஜி சாக்கோ, நிா்வாகிகள், பாதிரியாா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பேரவையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?: எம்எல்ஏக்களுக்கு 2 நாள்கள் பயிற்சி முகாம்

நோ்மறையான செய்திகள் புறக்கணிக்கப்பட கூடாது: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

அமைதியாக இணைந்து வாழ இந்தியா கற்றுக் கொள்ள வேண்டும்: ராணுவ தலைமைத் தளபதிக்கு பாகிஸ்தான் பதில்







