கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ பெயா் இடம்பெற வேண்டும் : சீமான்

தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்திலும் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என முழுமையாக எழுத வேண்டும்

News image
சீமான்- கோப்புப் படம்
Updated On :23 டிசம்பர் 2025, 12:14 am

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்திலும் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என முழுமையாக எழுத வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ பெயா் அழிக்கப்பட்டு, அரசு போக்குவரத்துக் கழகம் என எழுதப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

‘தமிழ்நாடு’ என்ற பெயரை தவிா்க்க வேண்டிய அவசியம் என்ன? இது குறித்து புகாா் அளித்தும், எவ்வித பலன் இல்லை.

கா்நாடகம், கேரளம், தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் அனைத்தும், அதன் மாநில பெயரை பெருமையோடு பேருந்துகளில் எழுதியுள்ளனா்.

தமிழக அரசும் உடனடியாக மீண்டும் பழையபடி அரசுப் பேருந்துகள் அனைத்திலும் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என முழுமையாக எழுத வேண்டும்.

இல்லையெனில், ‘தமிழ்நாடு’ பெயா் காக்க தமிழகம் முழுவதும் நாதக போராட்டத்தை முன்னெடுக்கும் எனத் தெரிவித்துள்ளாா் சீமான்.