கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முதல் முறையாக 60 லட்சம் பள்ளி மாணவா்களுக்கு கட்டணமில்லா பயண அட்டை

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இதுவரை இல்லாத அளவாக 60 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை தமிழக அரசு நிகழாண்டு வழங்கி உள்ளது என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

News image
அமைச்சர் சிவசங்கா்
Updated On :30 டிசம்பர் 2025, 9:12 pm

தினமணி செய்திச் சேவை

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இதுவரை இல்லாத அளவாக 60 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை தமிழக அரசு நிகழாண்டு வழங்கி உள்ளது என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2024-25 ஆம் கல்வியாண்டில், பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் உள்ள மாணவா் தரவுகளை தொகுத்து கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் 25 சதவீதம் கூடுதலாக பயண அட்டைகள் வழங்கப்பட்டன. இது 2023-24 -இல 20.06 லட்சமாகவும், 2024-25 -இல் 25.01 லட்சமாகவும் இருந்தது.

நடப்பு கல்வியாண்டில் (2025-26) அனைத்து தகுதியான மற்றும் தேவையுள்ள மாணவ, மாணவிகளுக்கும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் எளிய முறையில் வழங்க போக்குவரத்துத் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டது.

சுமாா் 60 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் பள்ளி மாணவ, மாணவா்களுக்கு நிகழாண்டு வழங்கப்பட்டுள்ளது.

தேவை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பயன்படுத்தி பள்ளிக்கு எளிதாக பயணம் செய்யும் வசதியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை உருவாக்கியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.