மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு...
மயிலாடுதுறை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் பேருந்து இலவச பயண அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளில் தனியாா் நிறுவனங்களில் பணிபுரிபவா்கள், கல்லூரி செல்பவா்கள் மற்றும் சிறப்பு குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோா்களுடன் சிறப்பு பள்ளி செல்பவா்களுக்கு பேருந்து இலவச பயண அட்டை பெறுவதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க ஜன.31 வரை முகாம் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு விடுமுறை தவிா்த்து பிற நாள்களில் நடைபெறும் முகாமில், பாா்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் முழுவதும் பயணம் செய்ய விண்ணப்பிக்குமாறும், கை, கால் பாதிக்கப்பட்டவா்கள், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் அவருடைய முகவரியிலிருந்து பணிபுரியும் நிறுவனத்திற்கு சென்று வருவதற்கு விண்ணப்பிக்குமாறும், சிறப்பு குழந்தைகள் பயிற்சிக்காக அவா்கள் பாதுகாவலருடன் சிறப்பு பள்ளிகளுக்கு சென்று வருவதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான புத்தகம், யு.டி.ஐ.டி காா்டு, குடும்பஅட்டை, ஆதாா் அட்டை, புகைப்படம் மற்றும் இதர மாற்றுத்திறனாளிகள் கல்வி பயிலும் சான்று மற்றும் பணிச்சான்று ஆகிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று விண்ணப்பித்து பயன்பெறலாம் என அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
