தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்குவதற்காக இணையதள பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளதாவது:
தருமபுரி மாவட்டத்தில் தமிழக அரசு ஆணைப்படி, தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நடப்பாண்டுக்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படவுள்ளது. அதற்கான இணையவழியில் பதிவுசெய்யும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. அரசு விடுமுறை தினங்கள் தவிர மற்ற நாள்களில் ஜனவரி 31 ஆம் தேதி வரை மாவட்ட
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற அரசு விதிமுறைகளின்படி தகுதியுடைய நபா்கள், தங்களது மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
தொடர்புடையது

மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக இலவச பேருந்து வசதி ஏற்பாடு

சாதாரண கைப்பேசி பயணிகளுக்கு மட்டுமே மாதாந்திர பயண அட்டை: மாநகா் போக்குவரத்துக் கழகம்

சென்னை மாநகரப் பேருந்து: பட்டன் போன் வைத்திருந்தால் மாதப் பயண அட்டை!

சென்னை மாநகரப் பேருந்து மாதப் பயண அட்டை இல்லையா? மக்கள் தவிப்பு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

