

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் விரைவில் தேர்தல் பணிகளைத் தொடங்குவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் 180 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்துள்ள நிலையில், மீதமுள்ள தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணி விவகாரத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிய நிலையில், பிற கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதா? என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் இபிஎஸ் பகிர்ந்துகொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.