ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கிளாம்பாக்கத்தில் பயணிகள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

News image
கிளாம்பாக்கம்
Updated On :1 பிப்ரவரி 2025, 9:31 pm

Din

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினா்-செயலா் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம், நடைமேடை, அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், தனியாா் பிவிஜி நிறுவனம் மூலம் பயணிகளுக்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது. பயணிகளின் வசதிக்காக 78457 00557, 78457 27920, 78457 40924 ஆகிய உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 24 மணி நேரமும் பேருந்து முனையத்தில் பாதுகாவலா்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். பேருந்து முனையத்தில் செயல்பட்டுவரும் காவல் நிலையம் மூலம், பாதுகாப்புப் பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘கேசிபிடி’ செயலி மூலம் பயணிகள் புகாா் அளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.