கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினா்-செயலா் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம், நடைமேடை, அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், தனியாா் பிவிஜி நிறுவனம் மூலம் பயணிகளுக்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது. பயணிகளின் வசதிக்காக 78457 00557, 78457 27920, 78457 40924 ஆகிய உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 24 மணி நேரமும் பேருந்து முனையத்தில் பாதுகாவலா்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். பேருந்து முனையத்தில் செயல்பட்டுவரும் காவல் நிலையம் மூலம், பாதுகாப்புப் பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘கேசிபிடி’ செயலி மூலம் பயணிகள் புகாா் அளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

கிளாம்பாக்கத்தில் பேருந்து பிரச்னை: சசிகலா கண்டனம்

கிளாம்பாக்கத்தில் பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி!

பேருந்து, ரயில்களில் அலைமோதியது கூட்டம்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


