கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினா்-செயலா் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம், நடைமேடை, அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், தனியாா் பிவிஜி நிறுவனம் மூலம் பயணிகளுக்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது. பயணிகளின் வசதிக்காக 78457 00557, 78457 27920, 78457 40924 ஆகிய உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 24 மணி நேரமும் பேருந்து முனையத்தில் பாதுகாவலா்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். பேருந்து முனையத்தில் செயல்பட்டுவரும் காவல் நிலையம் மூலம், பாதுகாப்புப் பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘கேசிபிடி’ செயலி மூலம் பயணிகள் புகாா் அளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் வாடகை காா் வசதி: சிஐடியு சங்கம் வலியுறுத்தல்

கத்தாரில் எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

தமிழக ஒப்புதலின்றி மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது






