சென்னை சென்ட்ரல், திருவனந்தபுரத்தில் இருந்து தில்லி நிஜாமுதினுக்கு இயக்கப்படும் ராஜ்தானி விரைவு ரயில்களில், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் - தில்லி நிஜாமுதின் இடையே வாரத்தில் மூன்று நாள்கள் ராஜ்தானி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பிப். 4-ஆம் தேதி முதல் கூடுதலாக தலா ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டியும், ஒரு மூன்றடுக்கு கொண்ட ஏசி வகுப்புப் பெட்டியும் இணைக்கப்படும்.
அதேபோல், சென்னை சென்ட்ரல் - தில்லி நிஜாமுதின் இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் ராஜ்தானி விரைவு ரயிலில் பிப். 5-ஆம் தேதி முதல் கூடுதலாக தலா ஒரு முதல் வகுப்புப் பெட்டியும், ஒரு மூன்றடுக்கு கொண்ட ஏசி வகுப்புப் பெட்டியும் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








