அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நிஜாமுதின் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தில்லி நிஜாமுதினுக்கு இயக்கப்படும் ராஜ்தானி விரைவு ரயில்களில், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

News image
கோப்புப் படம்
Updated On :2 பிப்ரவரி 2025, 8:15 pm

Din

சென்னை சென்ட்ரல், திருவனந்தபுரத்தில் இருந்து தில்லி நிஜாமுதினுக்கு இயக்கப்படும் ராஜ்தானி விரைவு ரயில்களில், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் - தில்லி நிஜாமுதின் இடையே வாரத்தில் மூன்று நாள்கள் ராஜ்தானி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பிப். 4-ஆம் தேதி முதல் கூடுதலாக தலா ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டியும், ஒரு மூன்றடுக்கு கொண்ட ஏசி வகுப்புப் பெட்டியும் இணைக்கப்படும்.

அதேபோல், சென்னை சென்ட்ரல் - தில்லி நிஜாமுதின் இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் ராஜ்தானி விரைவு ரயிலில் பிப். 5-ஆம் தேதி முதல் கூடுதலாக தலா ஒரு முதல் வகுப்புப் பெட்டியும், ஒரு மூன்றடுக்கு கொண்ட ஏசி வகுப்புப் பெட்டியும் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.