கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

சிறைச்சாலையில் கோழிப்பண்ணை! கைதிகளுக்கு கோழிக்கறி! அரசுக்கு ரூ.10 கோடி மிச்சம்!!

வேலூர் மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள கோழிப்பண்ணையால் அரசுக்கு ரூ.10 கோடி மிச்சமாகியிருக்கிறது.

News image

சிறைச்சாலை - Center-Center-Chennai

Updated On :3 பிப்ரவரி 2025, 12:13 pm IST

வேலூர் மத்திய சிறை வளாகத்துக்குள், சிறைக் கைதிகளுக்கு வாரத்தில் இரண்டு நாள்கள் கோழிக்கறி வழங்குவதை எளிதாக்க, கோழிப்பண்ணை தொடங்கப்பட்டு, தற்போது அது பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

வேலூர் மத்திய சிறையில், கைதிளால் நடத்தப்படும் கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளை, பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் சேவை ஒரு சில நாள்களுக்கு முன்பு தொடங்கியிருக்கிறது.

தமிழ்நாடு சிறைத் துறை சார்பில், சிறைக் கைதிகளுக்குத் தேவையான கோழிக்கறியை தங்களே உற்பத்தி செய்து கொள்வதற்காக, தமிழகத்தில் ஒரு சில சிறை வளாகங்களுக்குள் கடந்த டிசம்பர் மாதம் முதல் கோழிப் பண்ணை தொடங்கப்பட்டுள்ளது.

வாரத்தில் இரண்டு நாள்கள் சிறைக் கைதிகளுக்கு கோழிக்கறி வழங்குவதை எளிமையாக்கவும், சிறந்த கோழிக்கறி கிடைக்கும் வகையிலும் அதனை வாங்குவதால் அரசுக்கு ஏற்படும் ரூ.10 கோடி செலவினத்தை மிச்சம் பிடிக்கவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

தற்போது, இந்த திட்டம் சிறப்பாக செயல்பாட்டுக்கு வந்து, கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகள், சிறைக் கைதிகளுக்குப் போக, பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முதல்கட்டமாக முழுக் கோழியும், கறியாகவும் விற்பனைக்கு வந்திருக்கிறது.

சிறை அதிகாரிகள் மேற்பார்வையில், சிறைக் கைதிகளால், இந்த கோழிப்பண்ணையில் இருக்கும் கோழிகள் பராமரிக்கப்படுவதாகவும், 145 கிலோ கோழிக்கறி ஆண்கள் சிறைப் பிரிவுக்கும், 12 கிலோ கோழிக்கறி பெண்கள் சிறைப் பிரிவுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. வாரத்தில் இரண்டு நாள்கள் சிறைக் கைதிகளுக்கு சமைத்த கோழிக்கறி வழங்கப்படுகிறது.

முதலில் சிறைக் கைதிகளுக்காக தொடங்கப்பட்ட இந்த கோழிப்பண்ணையில் தற்போது 40 சதவீதம் கோழிக்கறி சிறைக் கைதிகளுக்கும், 60 சதவீதம் கோழிக்கறி விற்பனைக்கும் கொண்டு செல்லப்படும் வகையில் வளர்ச்சியடைந்திருப்பது சிறைத் துறையினருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.