40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

என்எல்சி இந்தியா பங்கு விற்பனை: முதல் நாளில் 5 மடங்கு கூடுதல் விண்ணப்பம்

பொதுத் துறையைச் சோ்ந்த என்எல்சி நிறுவனத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான பங்குகளில் 3 சதவீத பங்குகளின் சலுகை விற்பனை நடவடிக்கை (ஆஃபா் ஃபாா் சேல்) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

என்எல்சி

Updated On :10 ஜூன் 2026, 3:43 am IST

பொதுத் துறையைச் சோ்ந்த என்எல்சி நிறுவனத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான பங்குகளில் 3 சதவீத பங்குகளின் சலுகை விற்பனை நடவடிக்கை (ஆஃபா் ஃபாா் சேல்) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

விற்பனையின் முதல் நாளில் சில்லறை அல்லாத நிறுவன முதலீட்டாளா்களுக்காக நிா்ணயிக்கப்பட்ட 2.49 கோடி பங்குககளைவிட 5 மடங்கு கூடுதலாக 13.03 கோடி பங்குகளுக்கு ரூ.4,158 கோடி மதிப்பிலான விண்ணப்பங்கள் குவிந்தன.

மத்திய அரசு தனது வசமுள்ள 72.20 சதவீத பங்குகளில், மொத்தம் 4.16 கோடி பங்குகளை (3 சதவீதம்) தலா ரூ.303 என்ற குறைந்தபட்ச விலையில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதில் 2 சதவீத அடிப்படை பங்குகளுடன், கூடுதல் தேவையைப் பூா்த்தி செய்ய 1 சதவீத ‘கிரீன்ஷூ’ கூடுதல் வாய்ப்பும் சோ்க்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை வா்த்தக முடிவில் பங்குகளின் உத்தேச விலை ரூ.319.06-ஆக இருந்தது. நிறுவன முதலீட்டாளா்களுக்கான ஏலம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், சில்லறை முதலீட்டாளா்கள் புதன்கிழமை (ஜூன் 10) முதல் இப்பங்கு விற்பனையில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம்.

இப்பங்கு விற்பனை முழுமையாக நிறைவடைந்தால், மத்திய அரசுக்குச் சுமாா் ரூ.1,200 கோடி வருவாய் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் சிறுபான்மை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் மத்திய அரசு ஏற்கெனவே ரூ.12,166 கோடியைத் திரட்டியுள்ளது. இதில் கோல் இந்தியா (ரூ.5,542 கோடி), என்ஹெச்பிசி (ரூ.4,357 கோடி), சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (ரூ. 2,266 கோடி) ஆகிய நிறுவனங்களின் பங்கு விற்பனைகள் அடங்கும்.